பின் செல்ல
மெய்தான் அரும்பி
திருச் சதகம், மாணிக்கவாசகர் திருவாசகம்.

மெய்தான் அரும்பி

மாணிக்கவாசகர் திருவாசகம்

ஆடியோ விளக்கம்

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்
துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை
யாய்என்னைக் கண்டுகொள்ளே.

கொள்ளேன் புரந்தரன் மாலயன்
வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல்
லால்நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே
இருக்கப் பெறின்இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்
லாதெங்கள் உத்தமனே.

 

இசையமைத்துப் பாடியவர் : ஆசான் ம.செந்தமிழன்
தாளம் : சீர் செல்வி
துடி நரம்பிசை (Guitar) : மெய்யன்

பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.

Scroll to Top