பின் செல்ல
சுண்ணவெண் சந்தனச் சாந்தும்
அதிகை வீரட்டானம், அப்பர் தேவாரம்

சுண்ணவெண் சந்தனச் சாந்தும்

அப்பர் தேவாரம்

ஆடியோ விளக்கம்

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்
சுடர்த் திங்கட் சூளாமணியும்
வண்ண உரிவை யுடையும்
வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முர ணேறும்
அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை.

பூண்டதொர் கேழல் எயிறும்
பொன்றிகழ் ஆமை புரள
நீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து
நிலாக்கதிர் போலவெண் ணூலுங்
காண்டகு புள்ளின் சிறகுங்
கலந்தகட் டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை.

 

இசை அமைத்தவர் : ஆசான் ம.செந்தமிழன்
பாடல் குழுவினர் : சுடரி, இலக்கியா, சீர் செல்வி
நாதஸ்வரம் : சிவநேசன்
தவில் : பிச்சையப்பன்
சலங்கை : அருவி
மணிக்கொத்து : நற்றாய்
மிருதங்கம் : செந்தில்
தாளம் : ஐயப்பன்

பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.

Scroll to Top